அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து சென்டாக் மாணவர் - பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியது.

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து சென்டாக் மாணவர் - பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியது.
 இதுகுறித்து அதன் நிர்வாகிகள் மு.நாராயணசாமி, விசிசி. நாகராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், மருத்துவம் படிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 சென்டாக்கில் சேர்க்கை ஆணை பெற்று கல்லூரிகளுக்குச் சென்றால் கல்லூரி நிர்வாகங்கள் 3 லட்சத்துக்கு மேல் பணம் கட்டினால்தான் கல்லூரியில் சேர்த்துக் கொள்வோம் என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால், ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சிலர் பல் மருத்துவம் படிப்பதற்காகப் பெற்ற ஆணையைத் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
 எனவே, அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி பாதிக்காமல் இருக்க கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க உத்தரவிட வேண்டும். மீறி அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து வேண்டும்.
 இல்லையென்றால் மாணவர்களின் உரிமைக்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பெற்றோர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com