புதுச்சேரி மாநில காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
முதல்வர் வி.நாராயணசாமி முன்னிலை வகித்தார். மாநிலப் பொறுப்பாளர்கள் ஜக்மோகன் சிங் , பென்னி ஆகியோர் பங்கேற்று உள்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, புதுவையில் மாவட்ட, வட்டார, தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.