சென்னைப் பல்கலைக்கழகம், சர்வதேச அறிவியல் நுழைவுவாயில் மையமான நேஸ் ஆகியவை சார்பில், "மின்வேதியியல் - அரிமானம்' என்ற தலைப்பில் கிண்டியில் பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், அமலோற்பவம் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் சிவக்குமரன், சமியுல்லா, தீரேஷ், முகமது அமீன்கான் ஆகியோர் பங்கேற்று "மின்கலங்கள்' என்ற படைப்புக்கு முதல் பரிசு பெற்றனர்.
தமிழகம் - புதுவை அளவில் பங்கேற்றுப் பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் எஸ்.ஏ.லூர்துசாமி பாராட்டினார்.