புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஆகஸ்ட் 16 வரை வாகனங்கள் செல்லத் தடை

சுதந்திர தின விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் 16-ஆம் தேதி வரை வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் 16-ஆம் தேதி வரை வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விடுமுறை நாள்கள், சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை முதல் வருகிற 16-ஆம் தேதி வரை அனைத்து வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செயின்ட் லூயிஸ், துய்மா வீதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. செயின்ட் லூயிஸ், துய்மா வீதிகளில் வாகனங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
சுதந்திர தின விழா: சுதந்திர தின விழாவுக்கான அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற அனைவரும் வம்பாக்கீரப்பாளையம் சாலை வழியாக விழாத் திடலுக்கு வரவேண்டும். கார் செல்ல அனுமதி பெற்றவர்கள் வம்பாக்கீரப்பாளையம் சாலை வழியாக வந்து விழா நடக்கும் மைதானத்தின் வடக்கு பக்கம் கதவு எண். 1 வழியாக வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
கார் அனுமதி பெறாத அழைப்பாளர்களின் வாகனங்கள் அனைத்தும் வம்பாக்கீரப்பாளையம் சாலையில் விழா நடக்கும் மைதானத்துக்குத் தெற்கு பக்கம் உள்ள கதவு எண். 2 அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
அணி வகுப்பில் பங்கேற்கும் காவலர்கள் மாணவ, மாணவிகள் தங்கள் சைக்கிள், இருசக்கர வாகனங்களை வம்பாக்கீரப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
விழாவுக்கு வரும் அழைப்பாளர்கள் கவனத்துக்கு: விழாவுக்கு வரும் அழைப்பாளர்கள் கைப்பை, உணவுப் பொருள்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கேமரா, செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும், பாதுகாப்புக் காரணம் கருதி சோதனை செய்யும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
காலை 8.30 மணிக்குள் தங்கள் இருக்கையில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு மேல் வருபவர்கள் அழைப்பிதழ் வைத்திருந்தாலும் அனுமதி கிடையாது.
கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7.30 மணி வரையும் கடற்கரைச் சாலை, துமாஸ் வீதி, பாரதி பூங்கா, ஆளுநர் மாளிகை ஒட்டியுள்ள பகுதிகளில் பைக்குகள் தவிர வேறு எந்தவித வாகனங்களையும் நிறுத்த கூடாது. சட்டப்பேரவை, பொது மருத்துவமனைக்கு மேற்கே மூடப்பட்டுள்ள பெரிய வாய்க்காலின் மீது வாகனங்களை நிறுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com