சரியான நேரத்தில் ராகுல் காந்தி தலைவராக தேர்வு: அமைச்சர் நமச்சிவாயம்

சரியான நேரத்தில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்வாகி இருக்கிறார் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான 

சரியான நேரத்தில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்வாகி இருக்கிறார் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
 புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கரின் 61-வது ஆண்டு நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நமச்சிவாயம் பேசியதாவது:
 அம்பேத்கர் எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்துக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. நாட்டுக்காக ரத்தம் சிந்திய கட்சி காங்கிரஸ் தான். தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
 மத்தியில் மாற்றுக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது. மத்திய பாஜக அரசு சாதி, மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடி வருகிறது. சரியான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வாகி இருக்கிறார். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க காங்கிரஸார் பாடுபட வேண்டும் என்றார்.
 முன்னதாக, அமைச்சர் நமச்சிவாயம் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.கந்தசாமி, கமலக்கண்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், விஜயவேணி, ஜெயமூர்த்தி, புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர்கள் நீலகங்காதரன், தேவதாஸ், பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com