புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் சூரிய ஒளி ஆற்றல் குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கின் தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.
சுகுமாரன், செயலர் கே. நாராயணசாமி கேசவன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் ஆர்.வள்ளி வரவேற்றார். கல்லூரிப் பேராசிரியர் சி.சண்முகசுந்தரம் அறிமுகவுரை ஆற்றினார். இந்தப் பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் எஸ். ராஜ்குமார் நன்றி கூறினார்.