மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு, காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு, காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 கல்வியாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர்
 அ.முருகன் தலைமை வகித்தார். காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கடாசலபதி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் முதல்வர் உதயகுமார், லாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
 முன்னதாக, லாசுப்பேட்டையில் இருந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று சட்டப்பேரவை அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com