புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே மேம்பாலப் பணிகளை அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில், முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆமை வேகத் தில் நடைபெற்று வந்த இப்பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது.
திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் இந்த மேம்பாலத்தில் இறுதிக் கட்டப்பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆய்வு செய்தார்.
பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் சுப்பாராவ் மற்றும் தொகுதிச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது பாலம் திறக்கும் பணியினை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.