மங்களம் தொகுதி மனகுப்பம் கிராமத்திலிருந்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா வில்லியனூர் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களை இளைஞரணி மாநிலத் தலைவர் மெளலிதேவன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வி. சுவாமிநாதன், துணைத் தலைவர் செல்வம், துரைகணேசன், செயலாளர் நாகராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் புகழேந்தி கலந்துகொண்டனர். முன்னதாக இரு சக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது.