jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

மருத்துவமனையில் பெண் சாவு: சடலத்தை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக போராட்டம்

By புதுச்சேரி  |   Published on : 18th July 2017 08:21 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பாகூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சேதராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமார் இவரது மனைவி பூபேஷினி (36). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 இந்த நிலையில், பூபேஷினிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பூபேஷினியை அவரது உறவினர்கள், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பூபேஷினியின் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததே இறப்பிற்கு காரணம். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி பூபேஷினியின் உடலை வாங்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுôர் சாலையில் மருத்துவமனையின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
 தொகுதி எம்.எல்.ஏ., தனவேலு தலைமையில், பூபேஷினியின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திங்கள்கிழமை பூபேஷினியின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இது குறித்து அறிந்த கிருமாம்பாக்கம் காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம், உதவி ஆய்வாளர் தன்வந்திரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 போலீஸாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தனவேலு எம்.எல்.ஏ., பூபேஷினியின் குடும்பத்தினரை அழைத்துச் சென்று, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் புதுச்சேரி- கடலுôர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்