மனசாட்சியின்படி வாக்களித்தால் மீராகுமாருக்கு வெற்றி நிச்சயம்: புதுவை முதல்வர் நாராயணசாமி

மனசாட்சியின்படி வாக்களித்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார்தான் வெற்றி பெறுவார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மனசாட்சியின்படி வாக்களித்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார்தான் வெற்றி பெறுவார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கும் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன. எனவே, இந்தத் தேர்தலில் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கொள்கை, மனசாட்சியின் அடிப்படையில் வாக்களித்தால் மீரா குமாரின் வெற்றி உறுதி என்றார் அவர்.
 எதிர்க் கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் எம்.எல்.ஏ. திருமுருகன் சொந்த வேலை காரணமாக முன்கூட்டியே தனியாக வந்து வாக்களித்துச் சென்றார் அவர்.
 சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
 இந்தத் தேர்தலில் அதிமுக ஆதரவு அளிக்கும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com