புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிஸா மாநிலம், கோபல்பூருக்கு 120 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி நிலை கொண்டிருந்தது.
இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கோபல்பூர் - பூரி இடையே கரையைக் கடந்தது.
இதைக் குறிக்கும் வகையில் புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.