கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர்-4 தெரிவித்துள்ளார்
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மின்துறை கோட்டம் - 4க்கு உள்பட்ட வில்லியனூர், சுல்தான்பேட், ரெட்டியார்பாளையம், பூமியான்பேட், பாக்குமுடையான்பேட், குறிஞ்சி நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை, முத்திரையர்பாளையம், ஆனந்தா நகர், கோரிமேடு, காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, சஞ்சீவி நகர், பத்துக்கண்ணு, தொண்டமாநத்தம், சேதராப்பட்டு, கரசூர், திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.