அருந்ததியர் இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு புதுச்சேரி மாநில அருந்ததியர் மக்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் பொதுச் செயலர் எம்.தவமணி வெளியிட்ட அறிக்கை: எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தனி நபர் தீர்மானம் கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏ. சிவாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உள் ஒதுக்கீடு தர வேண்டும் என பேரவையில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி என்றார் அவர்.