முத்தியால்பேட்டை தொகுதி சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிகழ் கல்வியாண்டின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் வரவேற்றார். தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.