உலக நீர் நாள் விழிப்புணர்வுப் பேரணி

புதுச்சேரியில் உலக நீர் நாள் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் உலக நீர் நாள் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
 நீரின் சிறப்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக நீர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
 இதையொட்டி, புதுச்சேரி வேளாண் துறையின் மாநில நிலநீர் பிரிவு, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏக்கள் லட்சுமிநாராயணன், சிவா, அரசுச் செயலர் மணிகண்டன், வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி, கூடுதல் இயக்குநர்கள் ரவிபிரகாசம், ஜெயசங்கர், பொறியியல் பிரிவு இணை இயக்குநர் சோமலிங்கம், உறுப்பினர் செயலர் வெங்கட்ராமன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தாவரவியல் பூங்காவில் தொடங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி வழியாகச் சென்று கடற்கரை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com