ஜிப்மரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி ஜிப்மரில் 2-வது ஆண்டாக ஓவியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி ஜிப்மரில் 2-வது ஆண்டாக ஓவியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
 இதில் ஜிப்மர் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
 ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். வரும் 26-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
 இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. மேலும், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 25-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com