புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் பங்கேற்று 12 மாணவர்களுக்கு ரூ.2.6 லட்சம் கல்விக் கடனை வழங்கினார். அமைச்சரின் செயலர் தமிழ்ச்செல்வன், வட்டார காங்கிரஸ் பொருளாளர் முகுந்தராஜ், நிர்வாகி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.