சிஐடியு புதுவை பிரதேச சுமைப் பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவை அரசு கடந்த மார்ச் மாதம் பேரவை கூட்டத்தொடரில் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை அவகாசமோ, விவாதமோ இன்றி நிறைவேற்றியுள்ளது. இத்தொழிலாளர் விரோதச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் காமராஜர் சிலையில் இருந்து நேரு வீதி, காந்தி சாலை, மிஷன் வீதி வழியாக பேரணியாகச் சென்று தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். பின்னர், அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.தயாளன் தலைமை வகித்தார்.