மத்திய அமைச்சர் அனில் தவே மறைவு: முதல்வர் இரங்கல்

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தவே மறைவுக்கு முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தவே மறைவுக்கு முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 நர்மதை ஆற்றின் பாதுகாப்புக்காக தீவிரமாக பாடுபட்டவர். மேலும் புவிவெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு தொடர்பான நாடாளுமன்ற குழுவில் செம்மையாக செயல்பட்டார்.
 மென்மையான குணம் கொண்ட அனில் தவே, மாநிலங்களவையில் 10 ஆண்டுகள் என்னோடு இணைந்து செயல்பட்டார். அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com