வானொலி இசைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய வானொலி இசைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய வானொலி இசைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அகில இந்திய வானொலி நிலையம் நிகழாண்டு இசைப் போட்டியை இரு நிலைகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த இசைப் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள், நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: 16 வயதுக்கு மேல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எல்ஏசி போன்ற அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவராக இருக்கக் கூடாது.
இந்த இசைப் போட்டி, வாய்ப்பாட்டு (கர்நாடக இசை), வாத்திய இசை (கர்நாடக இசை), கிராமியப் பாடல், பக்திப் பாடல் ஆகிய பிரிவுகளில் நடைபெறும்.
முதல் நிலைப் போட்டி நிகழாண்டு ஜூலை 10-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் பிரிவில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டிக்கான ஒலிப்பதிவுக்கு அழைக்கப்படுவர்.
இசைப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் நிலைய இயக்குநர், புதுச்சேரி வானொலி நிலையம், இந்திரா நகர், புதுச்சேரி - 6 என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமாக ரூ. 500 வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 9-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com