புதுப்பெண் தற்கொலை: போலீஸார் விசாரணை

புதுச்சேரி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் மகள் ரேவதி (21). புதுச்சேரி காலாப்பட்டு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் கார்த்தி(32), தனியார் நிறுவன தொழிலாளி. இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரேவதி தனது தாயிடம் கூறியதால், அவரை மாமல்லபுரம் அழைத்துச் சென்று சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ரேவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காலாப்பட்டு போலீஸார், ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரேவதியின் பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com