மின் கட்டண நிலுவை செலுத்த சிறப்பு முகாம்

புதுச்சேரி மின்துறை சார்பில் மின்கட்டண நிலுவையை செலுத்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரி மின்துறை சார்பில் மின்கட்டண நிலுவையை செலுத்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்துறை கிராமம் (வடக்கு) கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டணம் செலுத்தத் தவறியவர்களின், மின் இணைப்புகளை துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருக்கனூர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவின் கீழ் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, செட்டிபட்டு, மணலிபட்டு, கே.மணவெளி, கைகோளப்பட்டு, கொடாத்தூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை தங்கள் கிராமங்களிலேயே செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை (நவ. 20) கூனிச்சம்பட்டிலும், 22-ஆம் தேதி செட்டிபட்டிலும், 23-ஆம் தேதி மணலிபட்டிலும், 24-ஆம் தேதி திருக்கனூரிலும், 27-ஆம் தேதி கொடாத்தூரிலும், 28-ஆம் தேதி கைகோளப்பட்டிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
மின் கட்டணத்தை செலுத்தத் தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com