தேசிய மாணவர் படை தினத்தையொட்டி என்.சி.சி. மாணவர்கள், அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ரத்த தானம் செய்தனர்.
காரைக்கால் தேசிய மாணவர் படை அமைப்பு சார்பில் 69-ஆவது தேசிய மாணவர் படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை என்.சி.சி. தலைமை அலுவலர் சி.எஸ். சர்மா தொடங்கிவைத்தார். அரசு பொதுமருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மதன்பாபு, அண்ணா கலைக் கல்லூரி முதல்வர் சி. குணசேகரன் ஆகியோர் ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். என்.சி.சி. மாணவர்கள் மற்றும் என்.சி.சி. அலுவலர்கள் உள்ளிட்ட 30 பேர் ரத்த தானம் அளித்தனர்.