ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை விழிப்புணர்வு பிரசார ஊர்தி காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு நலவழித் துறை மூலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நவ. 21 முதல் டிச. 4 வரை ஆண்களுக்கான நவீன எளிய முறை குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஊர்தி, மாவட்ட ஆட்சியரக வாயிலில் இயக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கொடியசைத்து இயக்கிவைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி, தொழில்நுட்ப உதவியாளர் சேகர், தேவராஜ், சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.