பேருந்தில் சிக்கி கல்லூரி மாணவி சாவு

துப்பட்டா பேருந்தில் சிக்கியதால் விபத்துக்குள்ளாகி நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

துப்பட்டா பேருந்தில் சிக்கியதால் விபத்துக்குள்ளாகி நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
 ஏம்பலம் புதுநகரைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன். இவரது மகள் பொற்கிளை (21). இவர், கோரிமேட்டில் உள்ள மதர் தெரேசா கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், கல்லூருக்கு தனியார் பேருந்தில் சென்று வருவது வழக்கம்.
 இதனிடையே, எல்லப்பிள்ளைசாவடியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வரும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பொற்கிளை வியாழக்கிழமை காலை ஏம்பலத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் எல்லப்பிள்ளைசாவடிக்கு சென்றுள்ளார்.
 பேருந்தில் இருந்து அவர் இறங்கி சாலையைக் கடக்க முயன்ற போது அவர் அணிந்திருந்த துப்பட்டா காற்றில் பறந்து சென்று பேருந்தில் சிக்கியது. துப்பட்டா பொற்கிளையின் கழுத்தை இறுக்கியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் பொற்கிளையின் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
 வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் வரதராஜன், உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் அங்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com