மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு தினத்தையொட்டி, நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் வி.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த சுப்பையாவின் உருவப் படத்துக்கும் மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல, வ.சுப்பையா உருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணைச் செயலர்கள் அ.ராமமூர்த்தி, அ.மு.சலீம், பொருளாளர் அபிஷேகம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீதநாதன், முருகன், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சுப்பையா, சரளா மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள், தொகுதிச் செயலர்கள் கலந்து கொண்டனர்.