தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து புதுச்சேரியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து புதுச்சேரியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறது.
மியான்மர் நாட்டில் நடைபெற்ற கலவரத்தின் போது ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறினர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும், முஸ்லிம்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலை உலக நாடுகள் மற்றும் ஐநா சபை தடுத்து நிறுத்தக் கோரியும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், புதுச்சேரி சுதேசி ஆலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் மாவட்டத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைச் செயலர் ஷேக் மைதீன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com