பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின விழா

புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா இன்னவேட்டர்ஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் செயல் திட்டங்களைச் சமர்ப்பித்தனர்.
சிறந்த திட்டங்களைச் சமர்ப்பித்த மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு பகிரந்தளிக்கப்பட்டது.
மேலும், கடந்த கல்வியாண்டில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் செயல் திட்டங்கள் துறை வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு திட்டத்துக்கும் பரிசுத் தொகை ரூ. 70,000 வழங்கப்பட்டது. மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவன மேலாளர்கள் செந்தில்முருகன், எம்.பிரகாஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் கே.வெங்கடாசலபதி வரவேற்றார். தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மின்னியல் துறைத் தலைவர் எஸ்.அன்புமலர், இயந்திரவியல் துறைத் தலைவர் கே.வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com