மகள் பிரிந்த விரக்தியில் தாய் தற்கொலை

புதுவை அருகே மகள் பிரிந்து சென்ற விரக்தியில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுவை அருகே மகள் பிரிந்து சென்ற விரக்தியில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 புதுவை அருகே அரியாங்குப்பம் மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (45). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். அரியாங்குப்பம் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தியபடி, தனது, ஒரே மகளை விழுப்புரத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அவரது மகள் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், தாய் வீட்டிற்கே வந்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் லட்சுமி மன வேதனையில் இருந்தார்.
 இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லட்சுமியின் மகள் வேறொரு இளைஞருடன் சென்றுவிட்டதால், லட்சுமி வேதனை அடைந்தார். மகளுக்கு வாழ்க்கை சரியாக அமையவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றவர். மீண்டும் கடைக்கு வரவில்லை. ஊருக்குச் சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தினர் நினைத்திருந்தனர்.
 செவ்வாய்க்கிழமை லட்சுமியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் உதவி ஆய்வாளர் அன்பரசன் மற்றும் போலீசார் வந்து, வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டினுள் உட்கார்ந்த நிலையில் லட்சுமி தூக்குபோட்டு இறந்து கிடந்தார். இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆனதால் அவரது உடல் அழுகி நிலையில் காணப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com