புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற 7 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
நிறுவன முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மோகன்ராஜ் முகாம் அறிக்கை வாசித்தார். விரிவுரையாளர் திருநாராயணன் வரவேற்றார். விரிவுரையாளர் நடேசன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக என்எஸ்எஸ் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் தேவபாலன் கலந்து கொண்டு, மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், பசுமை புதுச்சேரியாக மாற்றப்பட வேண்டிய அவசியத்தையும், அதன் வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார். பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவிகள் அனந்தலட்சுமி, அனிதா ஆகியோர் முகாமின் செயல்பாடுகள் பற்றி கருத்துரைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் சித்ரா, அருணகிரி, மெர்லின், லாரன்சியா மேரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.