குப்பை லாரி - மொபெட் மோதல்: தொழிலாளி சாவு 

புதுச்சேரி நகராட்சி குப்பை லாரி - மொபெட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

புதுச்சேரி நகராட்சி குப்பை லாரி - மொபெட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் ஐயனாரப்பன் (65). புதுவை பல்கலை. கூலி தொழிலாளியான இவர், வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து தனது மொபெட்டில் முருகா திரையரங்கம் நோக்கி சென்றார். வழுதாவூர் சாலை வழியாக சென்றபோது, அவரது பின்னால் வந்த புதுச்சேரி நகராட்சியின் குப்பை லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஐயனாரப்பன் மொபெட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
 அப்போது, லாரியின் சக்கரம் ஐயனாரப்பனின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த கோரிமேடு போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஐயனாரப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com