தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை 

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வைச் சரியாக எழுதாததால், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வைச் சரியாக எழுதாததால், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 புதுச்சேரி அருமார்த்தபுரம் திருமூலர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (47). அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் கோகுல்ராஜன் (17). இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ளார். ஆனால், நுழைவுத் தேர்வை அவர் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்து வந்த அவர், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com