அம்பேத்கர் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுவை சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும்,

சட்டமேதை அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுவை சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். மாநில அதிமுக செயலர் புருஷோத்தமன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதேபோல, திமுக சார்பில் அந்தக் கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலர் சலீம் தலைமையில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் சட்டப்
பேரவை உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் வேல்முருகன் தலைமையில் அம்பேத்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அந்தக் கட்சியின் மாநில அமைப்பாளர் தேவபொழிலன் தலைமையில், பொதுச் செயலர் துரை.ரவிக்
குமார், அமுதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
மதிமுக சார்பில், மாநிலச் செயலர் கபிரியேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாமக சார்பில், கட்சியின் முன்னாள் எம்.பி. தன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகம் சார்பில், மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இதேபோல, மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அம்பேத்கர் தொண்டர் படை, ஆதிதிராவிடர் விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும், புதுவை சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, புதுவை பல்கலைக்கழக மாணவர்களும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அனைவரும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்துக்குச் சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அங்கு வடக்கு மாநில திமுக சார்பில், கட்சியின் அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு முன்னாள் 
எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com