புதுச்சேரி அரசு சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, தலைமையில் நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல் வடக்கு மாநில திமுக நிர்வாகிகளும் அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.விசுவநாதன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதேபோல பாமக மீனவர் அணி தலைவர் உத்ராடன், பார்வார்டு பிளாக் முத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.