புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

புதுச்சேரியில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். 

புதுச்சேரியில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெற்று வருகிறது.
 இதில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.
 இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர், காலாப்பட்டு அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
 பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com