முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தொகுதி எம்எல்ஏ வையாபுரிமணிகண்டன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், பழனியப்பன், தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தொகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குவது, தொகுதியில் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.