புதுச்சேரியில் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
உலகெங்கிலும் காதலர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் காதலர் தின கொண்டாட்டம் அவ்வளவாக களை கட்டவில்லை. காதலுக்கு எதிரான சில அமைப்புகள் காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தல், விரட்டி அடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதால் காதலர்கள் பெரும்பாலானேர் பூங்காவுக்கு வரவில்லை.
மாறாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் புதன்கிழமை காலை அதிகமான காதல் ஜோடிகளை காண முடிந்தது.
இதனிடையே, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இருந்த காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஒரு காதல் ஜோடியிடம் அவர்கள் பூங்கொத்து கொடுத்த போது அந்த ஜோடி பூங்கொத்தை வாங்கிக் கொண்டனர். இதுபோல பூங்கொத்து கொடுக்காதீர்கள் என காவலர்கள் வலியுறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது, இதையடுத்து அங்கிருந்த காதலர்கள் சிலருக்கு பூங்கொத்து கொடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.