பிப்.17-இல் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுவை தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் பிப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதுவை தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் பிப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் பிப். 17-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் துறை வளாகத்தில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. 
முகாமில் winners education private limited என்ற தனியார் நிறுவனம் நேர்முகத் தேர்வு நடத்துகிறது.
இந்த நேர்முக தேர்வில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களை பணியிடமாகக் கொண்டு 280 காலியிடங்கள் உள்ளன. 20 முதல் 30 வயது நிரம்பிய இளநிலை பட்டம் அல்லது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
பணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் முதல் வழங்கப்படும். மேலும், இலவச தங்கும் வசதி, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உண்டு. முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தங்ள்ன்ம்ங் மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை/ நகல் சான்றிதழ்களுடன் வரும் 17}ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com