புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி.) மலர் வைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் இளையராஜா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,500 மோசடி செய்துள்ளார். இதன் மீது புகார் அளித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் தற்போது வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்.
இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (பிப்.23) புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் மலர் வளையம் வைக்கும் போராட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும்.
போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.