விவேகானந்தரின் 155-ஆவது பிறந்த நாள் விழா

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 155ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 155ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 அதன் ஒரு பகுதியாக, புதுவை சன் கிளப் சார்பில் முருங்கம்பாக்கம் காமராஜர் வீதி விரிவில் உள்ள பாலாஜி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. காமராஜர் வீதி குடியிருப்போர் நலவாழ்வு சங்க தலைவர் தங்கப்பழம் தலைமை வகித்தார். சன் கிளப் சமூக இயக்க தலைவர் சத்தியநாதன் செயலாளர் பழனிவேல் ஆகியோர் விவேகானந்தர் குறித்து சிறப்புரையாற்றினர்.
 விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com