இறைச்சி கடைகளை நாளை மூட உத்தரவு

புதுவையில் இறைச்சி கடைகளை திங்கள்கிழமை (ஜன.15-ம் தேதி) மூட புதுவை நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் இறைச்சி கடைகளை திங்கள்கிழமை (ஜன.15-ம் தேதி) மூட புதுவை நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் உள்ள கால்நடை அறுவை நிலையங்களும், பல்வேறு அங்காடிகளில் அமைந்துள்ள ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களும், மீன் கடைகளும் திருவள்ளுவர் தினமான ஜன.15-ஆம் தேதியும், வள்ளலார் நினைவு தினமான ஜன.31-ஆம் தேதியும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மாறாக இயங்கும் இறைச்சி மற்றும் மீன்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com