தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா

புதுவை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி.யின் கடற்படை பிரிவு தொடக்க விழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி.யின் கடற்படை பிரிவு தொடக்க விழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடற்படை எழுச்சி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்தந்தை ஆர்.பாஸ்கர்ராஜ் அடிகளார் தலைமை வகித்தார். புதுவை கப்பல்படை ஆணைய அதிகாரி என்.ரகுநாதன் சிறப்புரை ஆற்றினார். மேலும் என்.சி.சி. கடற்படை பிரிவுக்கான பெயர் பலகையையும் அவர் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து கடற்படை தொடர்பான காணொலிக் காட்சிகள் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டன. பள்ளியின் என்.சி.சி. கடற்படை பொறுப்பாளர்
ஆர்.அருண் சந்தோஷ் மற்றும் விமானப்படை பிரிவு பொறுப்பாளர் பி.டி.சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com