அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திருபுவனை தொகுதி உறுப்பினர் கோபிகா பேசியதாவது:
செல்லிப்பட்டு, சோரப்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளி இல்லை.
கிராமப்புற மாணவர்கள் கணினியில் பயிற்சி பெற கணினி பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் 2 பேனாக்களை வழங்கினார். ஆனால் அவை இரண்டுமே எழுதவில்லை என்றார்.