மத்திய அரசை கண்டித்து காவிரி நதிநீர் மீட்புக் குழுவினர் புதுச்சேரி ஜீவாநந்தபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதி நீர் வழக்கில் தமிழ்நாடு புதுவைக்கு அநீதி இழைக்கும் வகையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டத்தில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் மீட்புக்குழு சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மத்திய அரசின் ஆவணக்காப்பகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக காவிரி உரிமைக்குழு ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி தலைமையில் ஜீவானந்தபுரம் இதயா கல்லூரி அருகே ஒன்று திரண்டனர். அங்கிருந்து பேர ணியாக புறப்பட்ட அவர்கள் லாஸ்பேட்டை மத்திய அரசு ஆவணக்காப்பகம் அருகே சென்றபோது அங்கு போலீஸார் அவர்களை தடுப்பு கட்டைகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் மணிபாரதி, உலக தமிழ் கழக புதுவை அமைப்பாளர் தமிழுலகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், லாஸ்பேட்டை பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், ஜெகன், பேயத்தேவன், மதியழகன், செல்வராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.