புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் தளவாய்ப்பட்டி சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்தும், கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியகடை காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான போலீஸார் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து மறியலைக் கைவிட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.