மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியில் மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவர் மீன்பிடி தொழில், மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

புதுச்சேரியில் மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவர் மீன்பிடி தொழில், மரம் ஏறும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள்உள்ளனர். வளர்மதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
ஒரு மகள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகள்களுக்கு திருமணமாகவில்லை. இதனால், செல்வம் மன வருத்தத்தில் இருந்தார்.
இந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். தேங்காய்த்திட்டு பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் எதிரில் உள்ள புதரில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com