முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விழாக்கால இலவச கூப்பன் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர்
ஆர்.கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முப்படை நலத்துறை மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விழாக்கால இலவச கூப்பன் ரூ.3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. காரைக்கால் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் மற்றும் 60 வயதைக் கடந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, விழாக்கால அன்பளிப்பு கூப்பன் வரும் 15-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கப்படும். கூப்பன் பெற வருவோர் தவறாமல் தங்களுடைய அடையாள அட்டையையும், அதன் பிரதியையும் கொண்டுவர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.