ரஃபேல் விமான பேர ஊழல்: காங்கிரஸால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

ரஃபேல் விமான பேர ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று மத்திய சிறுபான்மை

ரஃபேல் விமான பேர ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி புதுச்சேரியில் சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற "ஹூனார்' எனும் உணவுத் திருவிழா- கண்காட்சி தொடக்க விழாவில்  பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் புதுவையில் பப்,  சூதாட்ட கிளப் தொடங்க அனுமதி கோரியுள்ளனர்.
ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக, ஆளும் பாஜக அரசு மீதும்,  தேசிய பாதுகாப்பின் மீதும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இது காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் உண்மை நிலை விரைவில் வெளிப்படும் என்றார் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது இரு பெண் பத்திரிகையாளர்கள் "மீடூ ஹேஷ்டேக்' மூலம் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முக்தார் அப்பாஸ் நக்வி பதில் கூற மறுத்து விட்டார்.  
முதல்வர் பங்கேற்பு: முன்னதாக, உணவுத் திருவிழா-கண்காட்சிக்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை வகித்தார். விழாவை முதல்வர் 
வே.நாராயணசாமி தொடக்கி வைத்தார். எம்.பி.க்கள் ராதா
கிருஷ்ணன்,  கோபாலகிருஷ்ணன்,  நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன்,  கே.ஜி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உணவுக் கலைஞர்கள், அறிஞர்கள் தங்களது அரங்குகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com