இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலர் இரா.அந்தோணி பணிகள், அமைப்பு நிலை செயல்பாடுகள் குறித்துப் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், துணைச் செயலர் வி.எஸ்.அபிஷேகம் பேசினர். 
கூட்டத்தில், புதுவை மாநில அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 2.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே, காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதன் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 14- ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் ஏ.ரூவியர், பொருளாளர் கே.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சரவணன், பி.சக்திமுருகன், பி.பெஞ்சமின், எம்.மைக்கேல், வி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com